search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் மீட்பு"

    • 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
    • மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று அவன் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தேடிய நிலையில் மதுரையில் இருந்து தொடர்பு கொண்ட போலீசார் மாணவன் மதுரையில் இருப்பதாகவும், உடனே வந்து அழைத்துச் செல்லலாம் எனவும கூறியுள்ளனர்.

    உடனே மாணவனின் பெற்றோர் அங்கு சென்று அவனை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    இதுகுறித்து மாணவனிடம் கேட்டபோது நேற்று பள்ளிக்கு செல்லும்போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் மதுரையில் இருந்த போலீசாரிடம் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை, அதனால் இங்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.

    மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அப்துல் வாசித் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • மாணவன் மாயமானது குறித்து ரெயில்வே உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார்.

    திண்டிவனம்:

    சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது மூசா. இவரது மகன் அப்துல் வாசித். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அப்துல் வாசித் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திண்டிவனம் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த ரெயிலில் வந்த அப்துல் வாசித்தை பிடித்து இரும்பு பாதை ரெயில்வே போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை இரும்பு பாதை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்து இரும்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார்.

    பின்னர் சைட்லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அப்துல் வாசித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார். விசாரனையில் படிப்பில் ஆர்வம் இல்லாததாலும், பெற்றோர் திட்டியதாலும் அவர்களிடம் கோபித்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல் வாசித்திற்கு அறிவுரைகளை கூறிய போலீசார், அவரது தந்தையிடம் அவனை ஒப்படைத்தனர்.

    • விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சபரிஷ் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • புகார் அளித்த 3 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறுவனை கண்டுபிடித்த கோயம்பேடு போலீசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு, வள்ளியம்மை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சத்திய சுந்தரம். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி இவர்களது மகன் சபரிஷ் (வயது 14) . விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சபரிஷ் திடீரென மாயமாகி விட்டான். பல இடங்களில் தேடி பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. மேலும் சபரிஷ் பெற்றோருக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடந்தது. அதில் 'என்னால் ஒரு நல்ல மகனாக இருக்க முடியவில்லை. சரியாக படிக்க முடியாததால் என்னால் உங்களுக்கு அசிங்கமும் அவமானமும் ஏற்படுகிறது. நான் பெரிய ஆளாக வருவேன் என்று என் மீது வைத்துள்ள நம்பிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள் மறந்து விடுங்கள், என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபரிசின் பெற்றோர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சிறுவன் சபரிசை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    சிறுவன் சபரிஷ் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் என்பதால் விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை புகார் அளித்த 3 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த கோயம்பேடு போலீசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    ×